ஜெயமோகனின் புகழ்பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு இது. இதிலுள்ள குறுநாவல்கள் வெளிவந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான விவாதங்களை உருவாக்கியவை. தீவிரமான, பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு நிகரான அனுபவத்தை அளிக்கும் மண், பத்மவியூகம் போன்றவை ஓர் எல்லை என்றால் கொடுங்கனவு போன்று ஆழ்ந்த உலுக்கலை அளிக்கும் நிழலாட்டம், டார்த்தீனியம் போன்றவை இன்னொரு எல்லை. ஒவ்வொரு குறுநாவலும் முழுமையான கதைக்களத்தை உருவாக்கி ஒரு பெரிய நாவலை வாசிக்கும் நிறைவை அளிப்பவை. சிறுகதைக்குரிய கூர்மையுடன் ஊடுருவுபவை.





