India Kalaiyin Nokkangal / இந்திய கலையின் நோக்கங்கள்
-
₹130
- ₹130
- SKU: AZI001
- ISBN: 9789361287862
- Translator: Thamaraikkannan Avinashi
- Author: Ananda Coomaraswamy
- Language: Tamil
- Pages: 88
- Availability: In Stock
ஆனந்த குமாரசுவாமி இந்தியர்கள் தங்கள் ஆன்மிக, அழகியல் மற்றும் கலை மாண்பு குறித்து விழிப்படைய வைக்க முயன்றார். இது மிக நுட்பமான, ஆனால் இன்றும் முடிவடையாத பணி. ஒருவகையில் ஆனந்த குமாரசுவாமி விட்ட இடத்திலிருந்து தாகூர் தொடங்குகிறார் எனச் சொல்லலாம். எனினும் தாகூர் அவ்வளவாக முன்னால் செல்லவில்லை. தாகூர் எழுத்தின்வழி மட்டுமே செயல்பட்டார். ஆனால், குமாரசுவாமி ஒரு முழுமையான எழுத்தாளருக்கும் மேலானவராக, பண்பாட்டு வரலாற்றாய்வாளராகவும் இருந்தார். தொல்நூல்கள் மற்றும் அழகியல் சார்ந்து மட்டுமல்லாமல், வரலாற்றின் பிற அம்சங்கள், கலையின் தத்துவம், தர்மம், நடனம், இசை சார்ந்தும் முழுமையான பண்பாட்டு வரலாற்றாய்வாளராக செயல்பட்டார். மேலும் மனிதனின் வாழ்வில் தனித்தனியாகப் பிரிந்திருக்கும் பல்வேறு அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ஆய்வாளராக இருந்தார். குமாரசுவாமி ஓர் அறிஞர். ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லாத அம்சங்களிலிருந்து ஒருங்கமைவு ஒன்றை உருவாக்க முயன்றார். அத்தகைய பிரம்மாண்ட ஒருங்கமைவுக்கான தேவை உள்ளது என முன்வைத்ததில் மிகச்சிறப்பான வெற்றியும் பெற்றார்.
– க. நா. சுப்ரமண்யம்