ஜெயமோகன் தன் நண்பர்களுடன் 2011லும் பின்னர் 2023லும் வடகிழக்கு மாநிலங்களில் நடத்திய இரு பயணங்களின் சித்தரிப்பு இந்நூலில் உள்ளது. வடகிழக்கின் அரசியலும் பண்பாடும் ஓர் அந்நியனின் பார்வையில் நுணுக்கமாக முன்வைக்கப்படுகின்றன. கூடவே நடுவே பன்னிரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல், பொருளியல் மாற்றங்களும் திரண்டு வருகின்றன. அதனூடாக இந்தப்பயணநூல் ஒரு வரலாற்றுச்சித்திரத்தை முன்வைப்பதாகவும் ஆகிறது.






