மூளைக்குச் செல்லும் தீவிரமான ஆற்றல்மிகுந்த மருந்தூசிகள் மூளையில் படரும் செயல்பாடுகளை அவனால் நன்கு உணரமுடிந்தது. எல்லாத் திசைகளிலிருந்தும் மூளைக்குப் பாயும் விசித்திரமான ஓர் ஒற்றை நீரூற்றுப் போல இருந்தது அது. ஒருநாள் நள்ளிரவில் அபயக்குரல்போல் எழுந்த ஒரு பெரும் கதறலுடன் விழித்தெழுந்து அரைஉடலில் அமர்ந்திருந்தது அவன் உடல். மருத்துவர்களும் பணியாளர்களுமாய் எல் லோரும் வந்து கூடிவிட்டார்கள். மனப்பிறழ்வில் பேசிவிட்ட வார்த்தைகளை உடனே உடனே தானே மீட்டுக்கொண்டான். அதை அமைதிப்படுத்துவதற்கான கடுமையான ஊசி எதுவும் தனக்கு வேண்டியதில்லை என்றான்.


